2009 ம் ஆண்டு வீசிய நிஷா புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் போல் இன்று இரவு அல்லது நாளை யாழ்ப்பாணத்தை தாக்கவுள்ளதாக காலநிலை அவதான மத்திய நிலையம் தற்போது அறிவித்துள்ளது. சுமார் 90-110 km வேகத்தில் காற்று வீசும் எனவும் அது மட்டுமல்லாது சுமார் 200mm மழை வீழ்ச்சியும் பதிவாகலாம் எனவும் மக்களை அவதானமாக இருக்குமாறும் முன் ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறும் அறிவித்துள்ளது.