கடலில் மூழ்கபோகும் யாழ்ப்பாணம்! சர்வதேச ஆய்வுக்குழு எச்சரிக்கை
யாழ்ப்பாணம் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக சர்வதேச ஆய்வுக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமகாலத்தில் பூமியில் ஏற்பட்டு வரும் அதிதீவிர உஷ்ணமாக காலநிலை காரணமாக, பனி மலைகள் வேகமாக உருகி வருகிறது. இதன்மூலம் கடலின் நீர் மட்டம் வழமையை விடவும் வேகமாக அதிகரித்து வருகிறது.
2025 இல் கடல் மட்டம் அரை மீற்றரினால் உயரும் எனவும், 2050, 2075 என கடல் மட்டத்தில் ஏற்படப்போகும் அதிகரிப்பு காரணமாக பாரிய சிக்கல் நிலை ஏற்படும் எனவும் IPCC (Intergovernmental Panel on Climate Change) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் அண்ணளவாக 40 சதவீதமான மக்கள் கரையோரங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான அனர்த்தம் காரணமாக அவர்களுக்கு ஆபத்துகள் ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள தேவையான முன்நடவடிக்கைகள் துறைசார் தரப்பினர் மேற்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தகவலை அனைவரும் அறிந்துக்கொள்வது சிறந்தது..