புதன், 23 ஆகஸ்ட், 2017

உருகும் உறவுகள்


கடலில் கலந்த உடல்களுக்கும்
காற்றில் உலாவும் உயிர்களுக்கும்
கண்ணீர் அஞ்சலியாம்-இதற்கு
---காணாமல் போனோர் என்னும் கண்துடைப்பாம் .!

வீதியில் கைதானோருக்கும்

வெள்ளை வேனில் கடத்தப்பட்டோருக்கும்
துக்கம் அனுஷ்டிப்பாம் -இவர்களுக்கு
-----காணாமல் போனோர் என்னும் புனைப்பெயராம் .


தந்தையை தேடும் குழந்தையும்

தன் குழந்தையை தேடும் தாயையும்
தாலி பிச்சை கேற்கும் மனைவியையும்
கதறி துடிக்கும் உறவுகளையும் -
----காணாமல் போனோரின் குடும்பங்கலாம்
ஏளனப் பார்வை வீசுகிறார் - அதை
இரங்கல் என்றே நடிக்கிறார் .


சீதுவையில் நினைவு தூபியாம்

சிறைபிடிக்கப்பட்டோருக்கு .
காணாமல் போனோர் என்றால்
கல்லறை ஏன் சொல்லுங்களேன் .?


கற்பழிக்கப்பட்டார்களா -இல்லை உடல் கருகி மண்ணில் வீழ்ந்தார்களா .?

பாழும் கிணற்றில் போட்டீர்களா -இல்லை
உடலை
பாதி அறுத்துத்திண்டீர்களா.?


துடிக்கவைத்து ரசித்தீர்களா -இல்லை

சுடு நீரில்
அவித்தீர்களா .?


எம் வினாக்களுக்கு

விடையில்லை
வேதனைகளுக்கு
முடிவில்லை .


நெஞ்சம் பிளந்திட அழுகின்றோம் -அவர்கள்

நினைவுகள் வதைத்திட துடிக்கின்றோம்
விழி நீரில் மாலை தொடுக்கின்றோம்
-எம்மவர்
மீண்டு வருவார் என்று
வாழ்கின்றோம்.


அண்ணன் தம்பியரே கேளுங்களேன்

எம் அவலத்தை உலகிற்கு எடுத்து
செல்லுங்களேன் .
-----காணாமல் போன உயிர்கள் எல்லாம்
எங்கே போனது....


கொடும் யுத்தத்தால் அழிந்த

உயிர்கள் போக -மிகுதி
அவர்களை நினைத்து உருகி அழிவதை பாருங்களேன் .