வியாழன், 29 ஜூன், 2017

ஏழ்மையான வாழ்க்கை கவிதை


அன்னார்ந்து பார்த்து 
அடுத்தவன் ஏங்கும் 
அன்பு நிறைந்த 
அழகான வாழ்க்கை 
அந்த ஏழை வாழ்வு... 

ஆயிரக்கணக்கில் 
ஆண்டு தோரும் 
ஆஸ்தி சம்பாதிப்பவன் 
ஆழ்ந்து உறங்கியதில்லை 
ஆறு நொடி கூட 
ஆறுதலாக... 

இன்பகரமாக 
இனைந்து கொண்ட 
இந்த உண்னதமான 
இரண்டு ஜீவன்கள்... 

ஈகை கொடையாளன் 
ஈரைந்து மாதத்தில் 
ஈன்ரெடுக்க கொடுத்தான் 
ஈகையாக குழந்தையை... 

உழைப்பே என்றும் 
உயர்வு தரும் - துனை 
உடனிருக்க இந்த 
உலகிலே வேரென்னதான் 
உயர்ந்த சொத்தாக வேனும்... 

நிம்மதியும், இன்பமும் 
நித்தம் நித்தம் 
நிலைபெருவதும் 
நிசப்தங்கள் 
நிலவுவதும் இங்கே தான்... 

புன்முறுவலோடு 
புசிப்பதும் 
புன்னகையோடு 
புறப்படுவதும் இங்கே... 

கட்டாந்தரை கூட 
கனப்பொழுதினில் தந்திடும் 
கவலையில்லாத ஆழ்ந்த 
கண்ணுரக்கம்...