சனி, 10 டிசம்பர், 2016

சொர்கத்தில் MGR ஜெயலலிதாவை சந்தித்த வேளை இவர்கள் என்ன பேசி இருப்பார்கள்


சொா்க்கத்தில் ஒரு நாள் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். ஜெயலலிதா ஆகிய இருவரும் சந்தித்து இருந்தால் என்ன பேசியிருப்பாா்கள் என்று கற்பனையாக......

MGR
வா அம்மு இப்ப தான் என்னை பார்க்க ஞாபகம் வந்ததா ?
ஜெ
புதிய பூமியில் ஆயிரத்தில் ஒருவனாக இல்லாமல் நீங்கள்
குடியிருந்த கோவிலான “கழகத்தை” அடிமைப் பெண்ணாக இல்லாமல் தனிப்பிறவி யாக “கழகத்தை” பாதுகாத்தேன்.
MGR
மகிழ்ச்சி!……. என்ன சொல்லிவந்தாய்?
ஜெ
உடல்நிலை சரியில்லை என்று!!!
MGR
அமெரிக்கா சென்றாயா?
ஜெ
அப்பல்லோவுக்கு சென்றேன்!
MGR
அதுபோதுமே” சொர்க்கத்துக்குவர
ஜெ(சோகமாக)
மக்களின் பாரமும்குறையவில்லை என் மனபாரமும் குறையவில்லை
புறப்பட்டு வந்து விட்டேன்.
MGR
நம்கட்சி.
ஜெ
கட்டுக்கோப்பாக இருக்கிறது தலைவா
MGR
நன்றி அம்மு. நம்இரத்தத்தின்இரத்தங்கள்..
ஜெ
ஏதோ இருக்கிறார்கள் தலைவா……. நீங்கள் இல்லாத வேதனையில் அன்று ,
நான் இல்லாத வேதனையில் இன்று.
MGR
நண்பர் கருணாநிதி
ஜெ
ஏதோ அலர்ஜியாம் காவேரியில் இருக்கிறராம்.
MGR
நல்ல வேளை அப்பல்லோவுக்கு செல்லவில்லை ?
ஜெ
முதல்வராகத்தான் இங்கு வருவேன் என்று அடம் பிடிக்கிறார் நான்விடவே இல்லை.
(அப்போது சோ வருவதைப்பார்த்து)
MGR
அடடா துக்ளக் நீயும் வந்து விட்டாயா? ஏற்கனவே இங்கே ஒருநாரதர் இருக்கிறாரே
சோ(சிரித்தபடி)
நாரதர் கலகம் நன்மையில் முடியும்.
(ஜெ வை பார்த்ததபடி) யாருக்கு வழி காட்டினேனோ அவரே வந்த பிறகு எனக்கு
அங்கென்ன வேலை?
MGR
அது சரி அம்மு உனக்கு அன்பு தங்கையல்லவா!
சோ
நாடோடி மன்னா …இங்கே நீங்க எந்த கட்சி.? நான் ஏதாச்சும் ஆலோசனை தரட்டுமா?
MGR
(சோ முதுகில் தட்டிக்கொடுத்து)
இங்கே கட்சியும்கிடையாது. கொடியும் கிடையாது. எதிரியும் கிடையாது .
அதை விடகூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகள் கிடையவே கிடையாது. வாங்க நிம்மதியாய் இருக்கலாம்.