ஞாயிறு, 13 நவம்பர், 2016

வெள்ளி, 11 நவம்பர், 2016

அதிர்ச்சியில் உலக மக்கள் – நீரில் மூழ்குமா உலகம்?

அதிர்ச்சியில் உலக மக்கள் – 

நீரில் மூழ்குமா உலகம்?

அமெரிக்கா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் அதிர்ச்சி விடயம் ஒன்றும் தற்போது பயங்கரமாக பரவத் தொடங்கியுள்ளது.
அதாவது உலகம் அதி பயங்கரமான அழிவைச் சந்தித்திடுமா என்ற கேள்வியே அது. இதற்கு முக்கிய காரணம் உண்டு 2016 நடக்கப்போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சுமார் 450 வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்டு கூறியமையால் தான்.
உலக அளவில் பலரையும் கவர்ந்துள்ள 16ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்டிரடாமஸ் கணிப்புகள் இன்றளவும் குழப்பமாகவும், சர்ச்சையாகவும் இருந்தாலும் கூட அவரது கணிப்புகளுக்கு இன்று வரை ஈர்ப்பும் இருக்கின்றது.
நாஸ்டிராடமஸின் பல கணிப்புகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. காரணம், பல முக்கிய வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையவை. கென்னடி சகோதரர்களின் படுகொலை, ஹிட்லரின் எழுச்சி, நெப்போலியனின் வீழ்ச்சி, 9/11 தாக்குதல் என பல உண்மைச் சம்பவங்களை முன் கூட்டியே கணித்தவர் அவர்.
அதே போன்று மோடி இந்தியாவின் பிரதமராவார் என, 450 ஆண்டுகளுக்கு முன்னரே இவர் மூலமாக கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்வேறு வகையாக கருத்துகள் ஊடகங்கள் மூலம் வெளிவந்தன. இது ஆச்சரியமான உண்மை.
தற்போது ஒபாமாவே கடைசி எனவும் நாஸ்டிராடமஸின் கணித்து கூறியுள்ளார். இவரின் 2016ம் ஆண்டுக்கான கணிப்புகளில் மிகவும் பரபரப்பாக பேசப்படுவது அதிபர் ஒபாமாவைப் பற்றி அவர் கூறியுள்ளதாகும்.
அவர்தான் அமெரிக்காவின் கடைசி அதிபராக இருப்பார் என்று நாஸ்டிரடாமஸ் கூறியுள்ளார். 2013ல் ஒபாமா மீண்டும் வெல்வார் என்றும் நாஸ்டிரடாமஸ் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். அது அப்படியே நடந்து விட்டது.
அதன் பின்னர் அமரிக்காவின் கடைசி அதிபர் தொடர்பில் ஒபாமா எனவும் கூறியுள்ளார். அப்படியானால் ஒபாமா ஆட்சியோடு அமெரிக்கா அழியப் போகிறதா? அல்லது அமெரிக்காவில் அதிபர் ஆட்சி முறை மறைந்து விடுமா அல்லது சீனா, ரஷ்யா போன்ற புதிய வல்லரசு நாடுகள் எழுச்சி பெறுமா என்பது குறித்துத் அவரின் கணிப்பு கூறவில்லை.
ஆனாலும் 2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என 450 வருடங்களுக்கு முன்னர் கணித்து கூறப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வகையில் 2016 பற்றி அவர் கணித்துள்ள பயங்கரமான விடயங்கள்,
2016ம் ஆண்டு அதி பயங்கரமான வானிலை மாற்றங்களை உலகம் சந்திக்கும். இயற்கைப் பேரிடர்கள், பேரழிவுகள், கடல் கொந்தளிப்புகள் அதிக அளவில் இருக்கும். பூமியே கடலுக்குள் போய் விட்டதைப் போன்ற அளவுக்கு வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கும்.
ஏற்கனவே பல நாடுகளில் பெருவெள்ளம் அலைக்கழித்ததைப் பார்க்கும்போதும், எல் நினோ எபக்ட் என்று கூறப்படுவதைப் பார்க்கும்போதும் இந்தக் கணிப்பு பலிக்கலாமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.
மேலும் 2016 இன் பின்னர் கோள்கள் வழக்கத்திற்கு விரோதமான முறையில் இடம் மாறுமாம். இந்த கோள்கள் மாற்றத்தால் பூமியில் பல அதி பயங்கர நிகழ்வுகள் ஏற்படலாமாம். ஆனால் அது என்ன மாதிரியான நிகழ்வுகள் என்பதை நாஸ்டிரடாமஸ் சொல்லவில்லை.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் பேரழிவு ஆண்டாக அமையும். வல்லரசு நாடுகளின் தலைமை மாறுபடும் அவை உலகை அழிக்க திட்டமிடும். ஆண்டு உலகம் அழிந்து விடும் என்றும் கூறியுள்ளார். ஈராக் போர்தான் உலக அழிவுக்கான முதல் படி எனவும் 450 வருடங்களின் முன்பே நாஸ்டிரடாமஸ் கூறியுள்ளார்.
அவர் கூறியதைப்போன்றே தற்போது அடுத்த உலக யுத்தம் பற்றியும் பேசப்பட்டு கொண்டு வருவதோடு பயங்கரவாதமும் உலகில் தலை தூக்கியுள்ளமை அவதானிக்க கூடிய ஒன்றே.
தற்போது அமெரிக்கா தேர்தலும் அவர் ஏற்கனவே கூறிய பல்வேறு விடயங்களும் பலித்துள்ளமையால் தற்போது உலக அழிவு கொள்கையும் பல்வேறு ஊடகங்கள் மூலம் பரவலாக வெளிவருகின்றது. தொடர்ச்சியாக அவர் கூறியவை நடந்து வருகின்ற காரணத்தினால் உலகம் பயங்கர அழிவை சந்தித்திடும் என்று மக்கள் மத்தியில் அதிர்ச்சி கலந்த அச்ச நிலையும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான போட்டிப்பரீட்சை மாதரி வினாத்தாள்!

செவ்வாய், 8 நவம்பர், 2016

👪அம்மாவிடம் பாசத்தையும் 👪அப்பாவிடம் நேசத்தையும் இன்றே உணர்த்துங்கள் சில நாளைகள் இல்லாமலும் போகலாம்...நெகிழ வைத்த ஒரு கவிதை : "அப்பா..."



நெகிழ வைத்த ஒரு கவிதை : "அப்பா..."

 அப்பா...


எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...




முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...




அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது




உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...




கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?




சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?




லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...




அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என
இன்று
அப்பா சென்ற பின்னர்
நான் யார் செல்லம்..?




எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?




சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு




நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..




அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...

ஞாயிறு, 6 நவம்பர், 2016

👫காதல் கவிதைகள்👫

காதல் கவிதைகள்

👩இது காதலர்களின் சங்கமம்👨

உலக
அதிசயங்கள் எல்லாம்
கல்லால் ஆனவையடி
இல்லையேல்
உன்னையும் சேர்த்திருப்பார்கள்.
coast-631925_640
உன்
கண்களில் தொற்றிக் கிடக்கும்
காதலைச் சேகரிக்க
எத்தனிக்கிறேன்
நீயோ
மின்சார இழைகளை
இமைகளில் தேக்கி
தத்தளிக்க வைக்கிறாய்.
coast-631925_640
நீ
இமைக்கும் அழகைக்
காண்பதற்காகவே
இமைக்காமல் கிடக்கின்றன
என்
இமைகள்.
coast-631925_640
உன்
கண்கள்
ஆழ் மலர்க் கேணிகள்.
பறித்ததை விட
அதிகமாய்
பறிகொடுத்திருக்கிறேன்.
coast-631925_640
ஒவ்வோர் முறை
நீ
என்னைப் பார்த்துக்
கடக்கும் போதும்
என்
காதல் வலிமை சேகரிக்கிறது.
நீ
ஒரு முறை
புன்னகைத்தால்
சேமித்த அத்தனையும்
திருப்பித் தரவும்
சம்மதமெனக்கு !
coast-631925_640
காதலும் கடலும்
ஒன்றே
ஆழமாய் மூழ்காத கைகளில்
கிளிஞ்சல்களே
மிஞ்சும்.
coast-631925_640
காதலைச் செதுக்குவதாய்
நினைத்து
நான் செய்த
உளிப்பிரயோகங்களில்
காதல்
என்னைச் செதுக்கி முடித்தது
coast-631925_640
காதல்
பாதங்களுக்குக் கீழ்
பரவிக் கிடக்கும்
பூமிபோல,
கால்கள் கவனிக்காவிட்டாலும்
பூமி இருக்கும் !
பூமி கவனிக்க மறுத்தால்
கால்கள் நிலைப்பதில்லை.
coast-631925_640
உன்
முதல் பார்வை
என்னைத் தழுவியபோது
உள்ளுக்குள்
உடைந்து நழுவிய
மெளனக் கிண்ணங்களுக்கு
நான்
காதலென்று பெயரிட்டேன்.
coast-631925_640
காதல்
எரியும் போது வெளிச்சம்
அழியும் போது
இருள்.
சுண்டி விடப்பட்ட
ஒரு கிழமையின்
இரவு பகல் என்ற
இரு பக்கங்களைப் போல.
coast-631925_640
உன்
விழித் தீ விழாமல் போனால்
விழித்திருப்பதில்
அர்த்தமில்லை என்பதை
அறிந்தும்,
ஆயிரம் அகல்கள்
எண்ணையில் குளித்த
திரிகளோடு காத்திருக்கிறது
காதல் கனல்
விழாத பிரதேசங்களில்
எரிவதற்கு
என்ன இருக்கிறது ?
coast-631925_640
எத்தனை வார்த்தைகளால்
சொன்னாலும்
உனக்குப்
புரியப் போவதில்லை.
ஒரே ஒரு
முத்தத்தால் உணர்த்தி விடவா
என் காதலை ?
coast-631925_640
உன்னோடான
என் காதலை உணர்த்த
பனிப் புற்களையும்
சுடு கற்களையும்
காட்ட வேண்டும் நான்.
இரண்டும்
இணைந்தே விளைகின்றன
என்
காதல் காடுகளில்
coast-631925_640
பிரேதப் பரிசோதனையும்
பிரேமப் பரிசோதனையும்
தகவல்களை
மட்டுமே தர இயலும்.
வேண்டாம்
சோதனைக் கூடத்தில்
காதலைத் தயாரிக்கும்
விதிமுறை யாருக்கும்
வாய்த்ததில்லை.
coast-631925_640
காதல்
ஓர் புல்லாங்குழல்.
சரியான அளவு காற்றைச்
செலுத்துவதில்
இருக்கிறது
வெற்றியும் தோல்வியும்
coast-631925_640
அவிழ அவிழ
புதுப் புதுப் புதிர்கள்
புதிதாய் கிளைவிடுவது
காதலில் மட்டுமே.
புரிந்த இடத்தின் முடிவில்
புரியாமையின்
ஆரம்பம்
முளைவிடுவதும்
காதலில் மட்டும் தான்
coast-631925_640
காதல்
அதிகமான உவமைகளால்
தாலாட்டப் பட்ட
உலகின் ஒரே விஷயம்.
இன்னும்
உவமைகள் உலர்ந்துவிடவில்லை.
காதல்
தலை குலுக்கும் போதெல்லாம்
உதிர்ந்து கொண்டே இருக்கின்றன
உவமைகள் !
coast-631925_640
உன்னைத்
தீண்ட வேண்டும் எனும்
எண்ணமே
எனக்குள்
மொட்டுகளை மலர்த்தி விடுகிறது.
தீண்டி விட்டால்
மலர்ந்தவை
உலர்ந்து விடுமோ எனும்
அச்சமும் தலை விரிக்கிறது.
coast-631925_640
நாமென்ன
இரட்டைக் குழந்தைகளா ?
உனக்கு வலித்தால்
எனக்கு
கண்ணீர் வருகிறதே.
coast-631925_640
ஒருமுறை தான்
காதல் வருமென்பதெல்லாம்
பொய்யடி பெண்ணே,
எனக்கு
புதிது புதிதாய்
காதல் வருகிறது
உன்
ஒவ்வோர் புன்னகையிலும்.
coast-631925_640
என் குறைகளைப்
பட்டியலிட்டுப் பரிகசிப்பதை விட
நம்
நிறைகளைப்
பட்டியலிட்டுப் பரிசீலிக்கலாமே ?
ஆனாலும்
காதல்
பட்டியல்களில் பயிராவதில்லையடி.
உள்ளுக்குள் உயிராவது.
coast-631925_640
உடலுக்கு வெளியே
உயிர் நின்றாலும்
உயிர் வாழ முடியும் என்பதை
நீ
விலகியபோது தான்
உணர்ந்து கொண்டேன்.
coast-631925_640
தேவதை
உனை
அன்பு செய்கிறேன்
நான் ஆத்திகன் தானே !
coast-631925_640
உயிரைப் பார்க்க முடியாது
என்றார்கள்.
நீ
தருகிறாய்
தினசரி தரிசனம்
coast-631925_640
எழுதியவர்களுக்கும்
புரியாத
ஒரே கவிதை
காதல்.
coast-631925_640
சாத்தானும்
கடவுளும்
சங்கமித்துக் கொள்ளும்
வட்டப் பாதை
காதல் தான்
coast-631925_640
நான்
சொன்ன போதெல்லாம்
நீ
நம்ப மறுத்தாய்.
ஆனாலும்
நீ சொன்னால் நான்
நம்பி விடுவேன்.
சொல்லிவிடேன் காதலை !
coast-631925_640
என்
காதலுக்குப் பதிலாய்
ஏதேனும் தர விரும்பினால்
உன்
காதலைத் தா.
கடலுக்குப் பதிலாய்
வேறு எதைத் தர இயலும்
நீ ?
coast-631925_640
உண்மைக் காதல்
என்னும்
உத்தரவாதத்துடன் தான்
துவங்குகின்றன
அத்தனைப்
பொய்க் காதல்களும்.
coast-631925_640
என்னோடு
நீ இருக்கிறாய் என்பது
தேக நிலை.
நானாகவே
நீ இருக்கிறாய் என்பதோ
தேவ நிலை.
coast-631925_640
என்
குறைகளோடே என்னைக்
காதலிப்பதாய்
சொன்னபோது
செத்துப் போனது நம் காதல்.
காதலித்தும்
எப்படிக்
குறைகள் தெரிந்தன உனக்கு ?
coast-631925_640
காதலிப்பது
குற்றம் என்கிறாய்.
சட்டம் தெரியாதா உனக்கு
குற்றம் செய்யத்
தூண்டுவதும் குற்றமடி !
coast-631925_640
காதலுக்காய்
நீ சொல்லும் பதில்கள்
கேள்விகளையே
சூடி நின்றாலும்,
நீ
திரும்பக் கேட்கும் கேள்விகளில்
பதில்கள் தான்
பொதிந்து கிடக்கின்றன.
coast-631925_640
அந்த மலைகளும்
பள்ளத்தாக்கும்
எதிரொலிக்கத் தயங்காத
வார்த்தைகளை எதிரொலிக்க
நீ
தயங்குகிறாய்.
ஆனாலும்
நான்
எறிந்து கொண்டே இருக்கிறேன்
எப்போதேனும்
எதிரொலி வருமெனும்
எதிர்பார்ப்பில்
coast-631925_640
வாழ்க்கைக்கு
நிறைய தேவைகள்.
காதலுக்கு
ஒரே ஓர் தேவை
வாழ்க்கை.
coast-631925_640
கடிகாரத்தைப் போலவே
காதலும்
நொடிக்கொரு தரம்
துடிப்பதற்கே வாழ்கிறது.
coast-631925_640
மாற்றம் நிரந்தரம்
என்றார்கள்,
காதலித்துத் தோற்றவர்கள்.
நிரந்தரமாய் மாற்றம்
என்றார்கள்
இதயம் மாற்றிக் கொண்டவர்கள்.
coast-631925_640
நாம்
சந்தித்துக் கொண்டபோது
விருப்பங்களை
விரல் மாற்றிக் கொண்டோம்.
நம் விருப்பங்கள்
சந்தித்துக் கொண்டபோது
நாம்
விலகத் துவங்கினோம்.
எதுவும்
விரும்பாமலேயே
இருந்திருக்கலாம்.
coast-631925_640
புன்னகைக்கும்
கண்ணீருக்கும்
இடைப்பட்ட தூரத்தில்
தான்
பயிராகின்றன
பலகோடிக் காதல்கள்.
coast-631925_640
நீ சொன்னதற்கும்
நான் சொல்லாததற்குமான
வார்த்தைகளுக்கு
இடையே
ஏராளமாய் கிடக்கின்றன
உண்மையின் வார்த்தைகள்.
coast-631925_640
உதடுகள் காதலில்
உரசும் வேளையில்
உடையா
மெளனம் உடைபடும்.
coast-631925_640
கனவில் கூடப்
பேசப் பயப்படும் எனக்கு
நிஜம்
எதைத் தந்துவிடக் கூடும் ?
coast-631925_640
இருட்டில் கிடக்கும்
காகம் போல
என் காதலும்.
சத்தமிடும் வரை
சாத்தியமில்லை என்றறிந்தும்
இருட்டென்னும்
பெரும் சிறகின் அடியிலேயே
அடைந்து கிடக்கிறது.
மெளனமாய்.
coast-631925_640
அந்தக் கிளி
புதிதாய் ஓர்
கூட்டுக்குள் குடிபுக
ஆசைப்பட்டு
பறந்து விட்டது.
என்
கூட்டுக்குள்
இன்னும் அந்த சிறகோசைகள்
அகலவேயில்லை.
coast-631925_640
பையில் போட்டு
கையில் எடுக்கும்
தெருவோர மாயாஜாலமாய்
காதல்.
என் மனசில் போட்டுவிட்டேன்
உன் மனசில்
எடுக்க முடிந்தால்
வெற்றி.
coast-631925_640
நீ கொடுத்த
பூக்கள்,
பரிசுகள்,
அட்டைகள்
என எல்லாம் மறந்து விட்டன.
ஆனாலும்
ஈரமாய் இருக்கிறது
கடைசியாய்
உள்ளங்கையில் நீ வடித்த
கண்ணீர்த் துளி.
coast-631925_640
காதலின் அடர்த்தி
குறையக் குறைய
குறைகளின் பட்டியல்
வீர்த்துப் பெருக்கும்.
coast-631925_640
நான் காணும்
இரவுக் கனவுகளுக்கான
பதிலை
பகலில் சந்திக்கும் போது
நீ
தருவாயானால்
அங்கே முளைக்கும்
என் காதல் நதி.
coast-631925_640
நட்சத்திரங்களை
எண்ணி முடித்தபின் உன்
விரல்களை எண்ணவும்,
நிலவை
கண்டு திரும்பியதும்
அதன் பிம்பம் காணவும்
என்னருகே
நீ இருக்க விரும்புகிறது
மனம்.
தனியாய் தரைகிளறும்
மாமர
நிலா நிழல் பொழுதுகளில்.
coast-631925_640
காதல்
உலகத்தின் அளவென்றால்
மிச்ச அளவை
எங்கே வைப்பதடி ?
பேசாமல்
உன் கண் அளவு என்று சொல்
இன்னும்
அந்தக் கிரகத்தின்
தன்மை அறியவில்லை விஞ்ஞானம்.
coast-631925_640
தொப்பலால் நனையும்
பொழுதுகளை விட
சாரலில்
கண் நனைப்பது
கவித்துவமானது.
காதலில் மட்டும்
சாரலோடு திருப்திப்பட
தெரிந்து கொள்ளவில்லை மனசு !
coast-631925_640
தோற்றுப் போகுமென்று
முதலிலேயே
தெரிந்தும் கூட
தோற்றுப் போக சம்மதிக்கும்
ஒரே தளம்
காதல் தான்.
coast-631925_640
உனக்குள்
காதல் முளை விட்டபோது
எனக்குள் தானடி
அது
கிளைகளை விரித்தது.
நீ
முளையைக் கிள்ளி விட்டாய்
இந்தக்
கிளைகளை என்ன செய்வது
நான் ?
coast-631925_640
அறிவில்லையா ?
என்கிறாய்
என் இதயத்துக்கு
மூளை இல்லை.
உன்
மூளைக்கு
இதயம் இல்லை
coast-631925_640
என்
காதல் வெளிச்சங்களின் மேல்
நீ
ஊற்றிக் கொண்டே
இருக்கிறாய்
துளித்துளியாய் இருட்டு.
எனக்கு
வெளிச்சம் தருவதை விட
இருட்டைத் துரத்துவதிலேயே
கழிகின்றன
என் நெருப்பு நாட்கள்
coast-631925_640
நீ
பிரிகிறேன் என்று சொன்னபோது
எனக்குள்
ஒரு கோடி
சர்ப்பங்கள் படமெடுத்துப்
பாய்ந்தன.
பிரிவதாய் சொன்னதாலல்ல
உன்
விழிகளில் வழிந்த
சில துளிக் காதலுக்காக.
coast-631925_640
எத்தனை
அழகென்று
சொல்லமுடியாப் பட்டியலில்
உன்
விழிகளையும் சேர்த்து விட்டேன்.
coast-631925_640
என்
சன்னலுக்கு வெளியே
பறந்து திரியும்
புள்ளினங்களை விட
என்
கண்களுக்கு உள்ளே
பறந்து திரியும்
உன் பட்டாம்பூச்சிப்
புன்னகைக்கே
வண்ணச் சிறகுகள் ஏராளம்.
coast-631925_640
சட்டையைக் கழற்றி
ஆணியில் மாட்டுவது போல
என்
கவலைகளைக் கழற்றி விட்டேன்
நீ
சிரித்தது
எனக்காய் என்பது
புரிந்த வினாடியில்
coast-631925_640
இந்த வயசில் காதலா
என்று தான்
எல்லோரும் கேட்கிறீர்கள்
அது சரி
எந்த வயதில் காதலித்தால்
ஒத்துக் கொள்வீர்கள் ?
coast-631925_640
காதல்
ஓர்
வித்தியாச நெருப்பு.
தொட்டால்
சில்லிட்டும்
விலகினால் எரித்தும்…
coast-631925_640
கொட்டப்பட்ட
காலம்
நமக்கிடையேயான
கணங்களைக் கொஞ்சம்
மூடிவிட்டன,
ஆனால்
ரணங்கள் இன்னும் அப்படியே…
coast-631925_640
காதல்
என்
கரம்பிடித்து நடந்தபோதெல்லாம்
யாரும்
அழகாய் தெரியவில்லை.
எதிர்ப்படுவோர்
அழகாய் தெரிந்த
ஓர் கணத்தில்
திரும்பிப் பார்த்தேன்
திரும்பி
நடந்து கொண்டிருந்தது
என் காதல்.
coast-631925_640
பூமி
சிலிர்த்துக் கொள்ளும்
வினாடியில்
புதைந்து போகும்
உயிர்கள் போல,
நீ
மறுத்து நடுங்கியபோது
புதைந்து போனது
என்
ஒற்றைக் காதலும்
ஏறக்குறைய
ஆறு கோடிக் கனவுகளும்.
coast-631925_640
நீ
சிரித்துக் கொண்டே
ஒரு
கவிதை வாசித்தாய்
பிரமித்துப் போய்
பார்த்திருந்தேன் நான்
அற்புதக் கவிதை அது.
வீட்டுக்கு வந்து
தனிமையில்
வாசித்தபோது தான் புரிந்தது
கவிதை
மிகச் சாதாரணம்
coast-631925_640
நீ
அருகில் இருக்கும் போது
அலைகடல்
சத்தம் கூட
மெல்ல காது குடைந்து
கடந்து போகிறது.
நீ
விலகி விட்டாலோ
காது குடையும் சத்ததிலேயே
செத்துப் போகிறேன்
நான்.
coast-631925_640
நீ
பேசுவதெல்லாம்
இசையென்று
எல்லோரையும் போல
நானும் சொல்லியிருக்கிறேன்.
இப்போது
நல்ல
இசை கேட்கும் போதெல்லாம்
நீ
பேசுவது போலிருக்கிறது
எனக்கு.
coast-631925_640
வாழ்க்கைக்குத்
தேவையான
வருவாய் இல்லையென்றே
பல
காதல்கள் பிரிக்கப் படுகின்றன.
பின்
அவை
பணத்தை எண்ணிக் கொண்டும்
இழந்த காதலை
எண்ணிக் கொண்டும்
தேவையான வாழ்க்கையைத்
தொலைத்து விடுகின்றன
coast-631925_640